நீ கலைப்பை பிடித்து உழு
நான் வரப்பில் நின்று கண்காணிக்கிறேன்
நீ நாற்றுப்பிடிங்கி கட்டிவை
நான் எண்ணிப்பார்க்கிறேன்
உன் மனைவியை
குனிந்து நிமிர்ந்து
நாற்று நடச்சொல்!
என் மனைவி
களத்துமேட்டில்
அவளுக்கு கஞ்சி ஊற்றுவாள்!
இரவு பகல் பாராது
கண்விழித்து
தண்ணீர் பாய்ச்சு
காவல் காத்திரு
நெல்விளைந்து முற்றியதும்
அறுத்து-அடித்து-தூற்றி
மூட்டைகளாய் கட்டி
கொண்டுவந்து
என் வீட்டில் போடு
நான் உன்னை
வெளியே நிற்கச்சொல்லி
கூலி போடச் சொல்கிறேன்
வாங்கிக்கொண்டு
என்னை நிமிர்ந்துப்பார்
பல்லாயிரம் ஆண்டுகளாக
கூனிக்குறுகி நின்ற
என்னை நான் உன்னில்
பார்க்க விரும்புகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக