வாசல் தெளிச்சி - நீ
வரி வரியா கோலம் போட்டு
வந்து நான் பாக்கனும்னு
வம்பு பல செஞ்சவளே !
அஞ்சாறு வயசிலிருந்தே
அத்தானின் அருகிலிருந்து
அடுக்கு மல்லி பறிக்கச் சொல்லி
அழுதழுது சிரிச்சவளே !
சின்ன வயசிருந்தே
சின்ன சின்ன வீடுகட்டி
சில்லரையா சிருச்சி நாம
சிறுகுடும்பம் நடத்தினோமோ!
கருக்கல் நேரத்தில்
கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டு
கையில் குடமெடுத்து
கண்மாயிக்கு வந்தவளே !
நறுக்குத் தெரிச்சாப் போல
நாலு வார்த்தைச் சொல்லிபுட்டு
நடந்து நீ போகையிலே
நறுக்குத் தான் பட்டுப்போனேன்!
நொன்டிச் சாக்குச் சொல்லி
நோகவச்சு போரவளே
நொடிப் பொழுதில் என்னை
நொருக்கிப் போட்டவளே !
புதுவாழ்வின் கனவில்
புகையும் என் மனசு
புரியுமோ உனக்கு
புதுச் சீலை கட்டயிலே !
வாய்ச்ச கணவனுக்கு
வகை வகையா நீயாக்கி
வாய்க்கு ருசியாப் போடு - உன்
வாழ்க்கை மணத்திருக்க !
அப்பன் கண்டிப்பும்
அம்மாவின் கண்ணீரும்
அள்ளி நீ ஊத்தியதில்
அடியே நான் மூழ்கிப்போனேன் !
அள்ளியெடுத்து என்னை
ஆறடிக்குள் போட்டு
அந்தக் குழி மூடி - அதில்
அரசமரம் வைக்கச்சொல்லு !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக